அரசியல் தமைமைக்குழு

பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்குகிறது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு சாடல்!

Lotus Statenmnt

பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்குகிறது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு சாடல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு கூட்டம் ஜூன் 26-27 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபா லன் பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், எதிர்க்கட்சிகளை உடைக்கும் பாஜகவின் சதித்திட்டங்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இழப்பு, குடியுரி மைத் திருத்தச் சட்ட வஞ்சகம், நீட் தேர்வு உள்ளிட்ட கல்வித் துறை நெருக்கடிகள், அயோத்தி ராமர் கோவில் ஊழல் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கை வருமாறு:

எதிர்க்கட்சிகளை முடக்கும் ‘ஆபரேஷன் தாமரை’: பிராந்தியக் கட்சிகளுக்கு ஆபத்து!

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, எதிர்க்கட்சிகளை உடைக்கும் கொடூரமான நடவ டிக்கைகளில் பாஜக மும்முரமாக ஈடுபட்டது. மகா ராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளி லும், தில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியி லும் பிளவுகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அது திரிணாமுல் காங்கிரஸையும் உடைத்தது. அதைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ்) கட்சியிலும் மற்றொரு பிளவை ஏற்படுத்தியது. அடுத்ததாக சமாஜ்வாதி கட்சி உடைக்கப்படும் என்று பாஜக தலைவர்களில் ஒரு பிரிவினர் இப்போது கூறிக்கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் பேராசை நோக்கத்து டன், பாஜக திட்டமிட்டுப் பிராந்தியக் கட்சிகளைக் குறி வைத்து அவற்றை உடைத்து வருகிறது. இத்தகைய பெரும்பான்மை பலம் கிடைத்தால், தொகுதி மறுவரையறை சட்டமுன்வடிவை மட்டுமல்லாமல், தனது இந்துத்துவ-மனுவாத செயல்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான பல முக்கிய சட்டமுன் வடிவுகளையும் அக்கட்சியால் எளிதாக நிறைவேற்ற முடியும். இத்தகைய மாபாதக நடவடிக்கைகள் ஜனநாய கத்தைக் கேலிக்குள்ளாக்குவதுடன், கட்சித் தாவல் தடைச் சட்டங்களையும் முற்றிலும் பயனற்றவையாக்கு கின்றன. இது அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறை கள் மீது பாஜக கொண்டுள்ள அலட்சியப் போக்கை மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

நம்பகத்தன்மையை இழந்த தேர்தல் ஆணையம்: தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தேவை

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தி, ஒரு நடுநிலையான அரசியலமைப்பு அமைப்பா கச் செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணை யம் தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்து விட்டது. வாக்காளர் பட்டியல்களில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையானது பல் வேறு மாநிலங்களில் சுமார் ஆறு கோடி வாக்காளர்க ளின் வாக்குரிமையை வஞ்சகமாகப் பறித்துள்ளது. இதி லிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு வாக்காளர்க ளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, விதி மீறல்களைப் பொருட்படுத்தாமல் பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் இக்கொடூரச் செயல்முறையைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நடத்தப்படும் ஒட்டுமொத்த செயல்முறையிலும் முழு மையான வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி, ஒரு பரந்த மற்றும் விரிவான பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள அரசியல் தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.

குடியுரிமைச் சர்ச்சை: நலிவடைந்த மக்களை நாடற்றவராக்கும் வஞ்சகச் சூழ்ச்சி!

“கடவுச்சீட்டு (Passport) என்பது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல” என்று வெளியுறவு அமைச்சகம் சமீ பத்தில் வெளியிட்ட அறிக்கை, ஒரு சாதாரண நிர்வாகக் குறைபாடு மட்டுமல்ல; மாறாக, பாஜகவின் பாகுபாடு நிறைந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு வஞ்சக மான தாக்குதலாகும். மிகவும் முறையான, அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கூட முற்றி லும் பயனற்றதாக்கும் இந்த அப்பட்டமான அறி விப்பு, தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டி யல்களில் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறையு டன் மோசமான முறையில் கச்சிதமாகப் பொருந்து கிறது.

இந்த ஒருங்கிணைந்த சூழ்ச்சிகள், தனிப்பட்ட நடை முறைக் குறைபாடுகள் அல்ல; மாறாக, நமது மக்கள் தொகையில் மிகவும் நலிவடைந்த பிரிவினரின் வாக்குரி மையைப் பறித்து, அவர்களைச் சட்டவிரோதமானவர்க ளாக மாற்றி, அவர்களை ஒழித்துக்கட்டுவதற்கான ஓர் ஆழமான தீய மற்றும் திட்டமிட்ட உத்தியாகும். இது அவர்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே நாடற்ற வர்கள் என்ற நிலைக்குத் தள்ளுகிறது.

வங்காளத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு இன்னும் நிலுவையில் இருக்கும்போதே, ஒரு முக்கிய ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற சாக்குப்போக்கில் அவரது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க மறுப்பது, எதிர் காலம் எத்தகைய ஆபத்தை நோக்கிச் செல்கிறது என்ப தற்கான ஓர் அறிகுறியாகும். குடியுரிமையின் வரைய றையையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம், அரசாங்கம் ஒரு மதவாத சமூகப் பதிவேட்டிற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது; அதே சமயம், அது விலக்க முற்படும் மக்களின் ஜனநாயக வாக்குரிமை யையும் முற்றிலுமாகச் சிதைக்கிறது.

அரசியல் தலைமைக் குழு இந்தத் கொடூரத் தாக்கு தல்களை வன்மையாகக் கண்டிக்கிறது; மேலும், இத்தகைய ஜனநாயக விரோத நடைமுறைகளை உட னடியாக நிறுத்தவும், நீக்கப்பட்ட அனைத்துப் பெயர்க ளையும் உடனடியாக மீட்டெடுக்கவும், அதிகாரப்பூர்வ ஆவணங்களின் சட்டப்பூர்வப் புனிதத்தன்மை குறித் துத் தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத விளக்கம் அளிக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

கல்வித்துறையில் பாஜகவின் தோல்வி!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வுத் தாள்களை மதிப்பிடுவதில் உள்ள குளறுபடிகள் மற்றும் சியுஇடி (கியூட்) தேர்வை நடத்துவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றின் மூலம், பல்வேறு தேர்வுகளை நடத்துவதில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் திறமையின்மை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், 25-க்கும் மேற்பட்ட மத்தியத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இத்தகைய பொறுப்பான பணியை மேற் கொள்வதில் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) முற்றி லும் திறமையற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

தேசியத் தேர்வுகள் முகமையைக் உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், ஒன்றியக் கல்வி அமைச் சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் கோரிப் போராடும் மாணவர்களுக்கு அரசியல் தலைமைக்குழு தனது முழுமையான ஆத ரவை அளிக்கிறது. அரசின் அதிகார ஆணவப் போக்கை ன்மையாகக் கண்டிப்பதுடன், மாணவர்களின் நியாய மான கோரிக்கைகளை ஏற்று, தேர்வு நடத்துவதைப் பரவலாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

ராமர் கோவிலில் கூட்டுக் கொள்ளை!

ஊழலை வேரறுப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் மேற்கொண்ட தற்பெருமைமிக்க கூற்றுகள், அவர்களின் மற்றுமொரு ‘ஜும்லா’ (வெற்று வாக்குறுதி) என்பது முற்றிலுமாக நிரூபணமாகி யுள்ளது. வெளிப்படையான ஊழலில் ஈடுபடும் அவர்க ளின் நெருங்கிய கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு எந்தவி தத் தடையும் இல்லை என்றே தோன்றுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில், தற்போது பெரும் ஊழல் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள் ளன. சங் பரிவாரின் தலைமையிலான ராமர் கோவில் இயக்கத்தில் முன்னணியில் இருந்த பலரின் பெயர்கள், கோவில் நன்கொடைகளை முறைகேடாகக் கையாண் டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் நேரடியாக அடி படுகின்றன. இச்செயல்கள் சங் பரிவாரின் உண்மை யான ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

மேலும், ஒன்றிய வேளாண் துறை இணையமைச்சர் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அரசு உடன டியாக இவ்விவகாரம் குறித்து நடுநிலையான விசா ரணை நடத்த வேண்டும்; பதவிகளைப் பொருட்படுத்தா மல் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகத் தண்டிக்க வேண்டும். ‘நானும் ஊழல் செய்யமாட்டேன், மற்றவர்களையும் செய்ய விடமாட்டேன்’ (நா காவுங்கா, நா கானே தூங்கா) என்று மேடைகளில் முழங்கிய பிரதமர், இவ்விவகாரங்கள் குறித்துத் தனது நீண்ட மௌனத்தைக் கலைத்து, தனது அமைச்சரவையில் உள்ள அத்தகைய ஊழல்வாதிக ளுக்கும் திறமையற்றவர்களுக்கும் எதிராக உறுதியான வினையாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்த பலவீனமும், மக்களின் மீதான விலைவாசித் தாக்குதலும்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பலவீனம் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை அப் பட்டமாக மீறி, இஸ்ரேல் லெபனான் மீதான தனது கொடூ ரத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் அழுத்தத் தைத் தீவிரமாகத் தக்கவைப்பதன் மூலமே இந்த போர் நிறுத்தத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சர்வதேச எரிசக்தி சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இருப்பினும், சமை யல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் உயர்ந்த விலையைக் குறைப்பதற்கான எந்தவொரு பொதுநல நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு உடனடியாக இவ் விலைகளைக் குறைக்க வேண்டும். அத்துடன், கடுமை யான பாதிப்புகளைச் சந்தித்து வரும் விவசாயிகளு க்குத் தேவையான உரங்கள், குறிப்பாக யூரியா தடை யின்றி கிடைப்பதையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

ஜூலை 11-இல் மத்தியக் குழுக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மத்தியக்குழுக் கூட்டம் புது தில்லியில் வரும் 2026 ஜூலை 11-13 தேதிகளில் நடைபெறும் என அரசியல் தலைமைக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply