மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6, 2025 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் துறைமுகம் பகுதி, என்.எஸ்.சி. போஸ் சாலையில் மாநில செயலாளர் பெ. சண்முகம் பொதுமக்களிடம் உண்டி வசூல் இயக்கத்தை தொடக்கி வைத்தார். 26 குழுக்களாக நிதி வசூல் இயக்கத்தில் கட்சித் தோழர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் மனமுவந்து கட்சிக்கு தாராளமாக நிதி வழங்கினர். இந்த இயக்கத்தின் போது பொதுமக்களிடமிருந்து ரூ. 2,55,500/- நிதி வசூலானது குறிப்பிடத்தக்கது. இவ்வியக்கத்தில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, வெ.தனலெட்சுமி, மத்திய சென்னை மாவட்ட வரவேற்புக்குழு தலைவர் எம்.வி. கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர். குமார் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.
வெ. ராஜசேகரன்
அலுவலக செயலாளர்