மாநில செயற்குழு

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமைச் செயலாளருடன் நேரில் சந்திப்பு!

Shganmugam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் இன்று (16.05.2025)   தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திருமிகு என். முருகானந்தம் இ.ஆ.ப., அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தோம். இச்சந்திப்பின்போது,

1.            உச்சநீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணை நடைபெறுவதற்கு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும்,

2.            உயர்நீதிமன்றத்தில் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையிட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், அதன் தீர்ப்பு வரும் வரை மாவட்ட நிர்வாகம் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும்,

3.            பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ள பின்னணியில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது புனைந்துள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெறவும்,

இச்சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

               மேற்படி கோரிக்கைகளை கேட்டறிந்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பெ. சண்முகம்

மாநில செயலாளர்

Leave a Reply