சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ – மாணவியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

கவலையும், பயமும் கொள்ளாமல் மன அழுத்தமின்றி தன்னம்பிக்கையுடன் மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அனைத்து வகையிலும் உதவிகளைச் செய்வதோடு அவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் ஊட்டி அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்